Thursday, May 15, 2008

எங்கிருந்தோ ஆசைகள் .....


எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான் ஏன் இன்று மாறினேன்
(எங்கிருந்தோ)


ஆசை வரும் வயது.. உந்தன் வயது
பேசும் இளம் மனது.. எந்தன் மனது...
ஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும்
மாதுள்ளம் நாளரு தூதுகள் அனுப்பும்
என்னென்ன சுகம் வருமோ...தேவி.......

எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான்தான் உன்னை மாற்றினேன்


மாலை வரும் மயக்கம்..என்ன மயக்கம்
காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
பூவிதழ் மீதொரு பனித்துளி இருக்க
நான் அதைப் பார்க்கையில் நூலென இளைக்க
என்னென்ன அதிசயமோ....


சந்தித்ததோ பார்வைகள்
தித்தித்ததோ நினைவுகள்
மையலை சொல்லத் தெரியாமலே
ஏன் ஏன் இந்தக் கேள்விகள்ஆ....ஆஆஆ.. ஆ....ஆஆஆலாலாலாலாலாலாலா..லா..லா.
..ஒஹோ..ஹோ..ஹோ..ஹோஹோ

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி