Friday, May 16, 2008

ஜவ்வாது .........

ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம்
கோட்டை கட்டி வா வா வா
மாம்பழத்துச் சாறெடுத்து
மல்லிகையில்தேனெடுத்து தா தா தா..
(ஜவ்வாது)


வேலோடு விழியிரண்டு வெள்ளோட்டம் போனதென்று
நூலான இடையெடுத்து போராட வந்த பெண்ணே
ஆளான நாள் முதலாய் அச்சாரம் கொடுத்து விட்டு
வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற கண்ணா..கண்ணா...
ஹேஹேஹேஹெ....ஹே...
(ஜவ்வாது)


பூப்போல இதழ் விரித்து பொன்னான உடலெடுத்து
தேர் போல வந்த கண்ணே
சிலை போல வந்த பெண்ணே
அத்தானின் துணையிருக்க முத்தான மொழியிருக்க
பித்தாகக் கிடந்த என்னைக் கொத்தாக அணைத்த கண்ணா..கண்ணா...
ஹேஹேஹேஹெ..ஹே..
(ஜவ்வாது)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி