மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்
(மின்னல்)
தென்றல் வரும் சேதியிலே கொடி அசையும்,
அசையும்வண்டு தேடி வரும் சேதியிலே பூ மலரும்,
மலரும்கண்களிலே ஆசை நின்று தாளமிடும் -
குமரிகன்னத்திலே நாணம் வந்து கோலமிடும்
(மின்னல்)
பள்ளியறைச் சேதியிலே பதட்டம் வரும் பதட்டம் வரும்
பருவம் சொல்லும் சேதியிலே மயக்கம் வரும் மயக்கம் வரும்
சொல்லித் தந்த பாடத்தாலே தாய்மை வரும் -
நான்தாலாட்டுப் பாடுகின்ற நாளும் வரும்
(மின்னல்)
Sunday, May 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி