Monday, May 19, 2008

மூடித் திறந்த ....

மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
வா வா என்றது.....


அன்னக் கொடி நடை முன்னும் பின்னும்
அய்யோ அய்யோ என்றது
வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து
மெய்யோ பொய்யோ என்றது
கன்னிப் பருவம் உன்னைக் கண்டு
காதல் காதல் என்றது
காதல் என்றதும் வேறோர் இதயம்
நாணம் நாணம் என்றது
(மூடி)


காட்டுக் குயிலைக் கூட்டிலடைத்துப்
பாட்டுப் பாடச் சொன்னது -
அதுகூட்டுக் குயிலை நாட்டுக் குயிலாய்
கூட்டிப் போக வந்தது
வேட்டை உள்ளம் வலை விரித்து
வேங்கை வருமென நின்றது
வேங்கைக்காக விரித்த வலையில்
வெள்ளைக் கலைமான் விழுந்தது
(மூடி)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி