Friday, May 9, 2008

பவளக் கொடியிலே .....

பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்


பூம‌கள் மெல்ல‌ வாய்மொழி சொல்ல‌
சொல்லிய‌ வார்த்தை ப‌ண்ணாகும்
கால‌டித் தாம‌ரை நால‌டி நடந்தால்
காத‌ல‌ன் உள்ள‌ம் புண்ணாகும்
இந்த‌க் காத‌ல‌ன் உள்ள‌ம் புண்ணாகும்

பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்


ஆடைகள் அழகை மூடிய போதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால்
வாழ்ந்திடும் காலம் நூறாகும்
இங்கு வாழ்ந்திடும் காலம் நூறாகும் !

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி