Friday, May 9, 2008

நாம் ஒருவரை .....


நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்


ப‌ட்ட‌ ப‌க‌லினில் நில‌வெரிக்க‌
அந்த‌ நில‌வினில் ம‌ல‌ர் சிரிக்க‌
அந்த‌ ம‌ல‌ரினில் ம‌து இருக்க‌
அந்த‌ ம‌து உண்ண‌ ம‌ன‌ம் துடிக்க‌
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்


நீர் குடித்த‌ மேக‌ம் என் நீல‌வ‌ண்ண‌ கூந்தல்
நீர் குடித்த‌ மேக‌ம் என் நீல‌வ‌ண்ண‌ கூந்தல்
அந்த‌ நீல‌வ‌ண்ண‌ கூந்த‌ல்
அது நீயிருக்கும் ஊஞ்ச‌ல்


பால் கொடுத்த‌ வெண்மை
என் ப‌ளிங்கு போன்ற‌ மேனி
பால் கொடுத்த‌ வெண்மை
என் ப‌ளிங்கு போன்ற‌ மேனி
வெண் ப‌ளிங்கு போன்ற‌ மேனி
அதில் ப‌ங்கு கொள்ள‌வா நீ


வ‌ட்ட‌ க‌ருவிழி வ‌ர‌வ‌ழைக்க‌
அந்த வ‌ர‌வினில் உற‌விருக்க‌
அந்த‌ உற‌வினில் இர‌விருக்க‌
அந்த‌ இர‌வுக‌ள் வ‌ள‌ர்ந்திருக்க‌
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள் !


நான் தொட‌ர்ந்து போக‌
எனை மான் தொடர்ந்த‌தென்ன‌
நான் தொட‌ர்ந்து போக
என்னை மான் தொடர்ந்த‌தென்ன‌
பொன் மான் தொட‌ர்ந்த‌போது
ம‌ன‌ம் மைய‌ல் கொண்ட‌தென்ன‌


வ‌டித்த‌ க‌ண்ணில் பெண் பொய் வ‌டித்த‌தென்ன‌
மை வ‌டித்த‌ க‌ண்ணில் பெண் பொய் வ‌டித்த‌தென்ன‌
க‌ண் பொய் வ‌டித்த‌ பாவை
என் கை பிடித்ததென்ன‌

வெள்ளி ப‌னி விழும் ம‌லையிருக்க‌
அந்த‌ ம‌லையினில் ம‌ழைய‌டிக்க‌
அந்த‌ ம‌லையினில் ந‌தி பிற‌க்க‌
அந்த‌ ந‌தி வ‌ந்து க‌ட‌ல் க‌ல‌க்க‌

நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் வலது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி