Friday, May 9, 2008

மயக்கும் மாலை .....

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா (மயக்கும்)


பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும் புல் படுக்க பாய் போடுமே (மயக்கும்)
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலெ (மயக்கும்)


கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி என்னாளும் (மயக்கும்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி