Friday, May 16, 2008

காடு கொடுத்த ....

காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்குஓ..ஓ..ஓ..ஓ..
(காடு)


சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு -
அதைநம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு..நாடு நகரம் ஊராச்சு..
(காடு)


தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே -
இதைக்காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
கடனும் உடனும் தேவையில்லே
(காடு)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி