Friday, May 16, 2008

கதாநாயகன் கதை சொன்னான் ....

கதாநாயகன் கதை சொன்னான் -
அந்தக்கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு (கதா)
கதாநாயகி கதை சொன்னாள் -
அந்தக்கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் ஒரு
(கதா)


காவிரிக்கரைக்கு வரச்சொன்னான் -
இளங்கன்னத்தில் ஒன்று தரச்சொன்னான்
கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான் -
என்னைக்கட்டிக்கொண்டான் நெஞ்சில் ஒட்டிக்கொண்டான்


அங்கயற்கண்ணி தேசத்திலே
அழகிய வைகை ஓரத்திலே
பொங்கும் காதல் வேகத்திலே -
எனைப்பூட்டிக்கொண்டான் கொடி நாட்டிக் கொண்டான்
(கதா)


குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளிமொழிச் சோலையிலே
முற்றாத கனியென்னைத் தேடிக்கொண்டான் -
மெல்லமூடிக்கொண்டான் இசை பாடிக்கொண்டான்


மாமல்லபுரத்துக் கடல் அருகே -
இந்தமங்கை இருந்தாள் என்னருகே
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு -
நாங்கள்படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு
(கதா)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி