Saturday, May 17, 2008

கனிய கனிய ...

கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா


சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை சேதி சொல்லாதோ -
இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பங்கயமாகாதோ
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே -
புதுப்பண்பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே
(கனிந்த)


காலம் எனும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
கனிந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ -
அமுதேஎன் வாழ்வினில் வளரும் இன்பமே
(கனிய)


அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ -
உயர்செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ
மாந்தளிர் போலும்எழில்மேனிமின்னுவதெப்படியோ..
உம்..............உம்...............
நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே


நீலவானும் நிலவும் போல கூடுவோம் -
நல்இன்பம் என்னும் படகிலேறி ஆடுவோம்
ஆ....ஆ....ஆ...ஆ...

2 comments:

Anonymous said...

ஒரு சிறு தவறு...
இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பந்தயமாகாதோ..

திருத்தம்...
இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பங்கயமாகாதோ..

பூங்குழலி said...

நன்றி பாலாஜி

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி