Friday, May 16, 2008

காதல் எந்தன் ....

காதல் எந்தன் மீதில் என்றால்காதில் இனிக்கிறது -
தாலிகட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்
கவலைப் படுகிறது - மனசு கவலைப் படுகிறது


கட்டிக் கரும்பே கனியே உன்னைத்தட்டிக் கழிப்பேனோ -
நேரம்காலம் பார்த்து முறையாய்ப் பெண்ணும்
கேட்டுக்க வேண்டாமோ - நாளும்பார்த்துக்க வேண்டாமோ
(காதல்)


காலம் நேரம் கடந்தால் இனிமேல்உனக்கு நானில்லை -
அன்பேஎனக்கும் நீயில்லை
என்னை வேலி போட்ட நிலம் போலாக்க
தாலி போடோணும் - கழுத்தில்மாலை சூடோணும்


எண்ணம் போலே எல்லாம் நடக்கும்எதுவும் தப்பாது -
இனிமேஎதுவும் தப்பாது
இன்னும் என்ன என்ன வேணும்
கேளு என்னை இப்போது -
நீயும்என்னை இப்போது
(காதல்)


வீட்டைக் கட்டிக் குடித்தனம் நடத்திபாத்துக்க வேணும் -
பெண்ணைசேத்துக்க வேணும்
பட்டில் மெத்தை கட்டில் அங்கேபோட்டுக்க வேணும் -
சுகத்தைகூட்டிக்க வேணும்
முகத்துக்கு மேலே முகத்தை வச்சு
ஒண்ணு கொடுக்க வேணும் -
கொடுத்ததைதிருப்பி எடுக்க வேணும்
பிறகு தொட்டில் போட வேணும்
கொழந்தைய தூங்க வைக்க வேணும்
நீயும் பாட்டு பாட வேணும்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி