Thursday, May 15, 2008

உனக்கும் எனக்கும் ...

எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
இனியாருக்கு இங்கே கிடைக்கும்
(எனக்கும்)


கடலுக்கு நதியே சொந்தம்
காற்றுக்கு யார் சொந்தம் ?
நீருக்கு நிலமே சொந்தம்
நிழலுக்கு யார் சொந்தம் ?


மலருக்கு கூந்தல் சொந்தம்
மனதுக்கு நீயே சொந்தம்
வானுக்கும் நிலவே சொந்தம்
வஞ்சிக்கு நீயே சொந்தம்.. ஆஹா..
(எனக்கும்)


புல்லாலே வேலி கட்டி
பூவாலே மேடை இட்டு
நெல்லாலே வாசல் வைத்து
நேருக்கு நேரே நின்று


வெள்ளத்தில் வெள்ளம் வந்து
விழுந்ததைப் போலே இன்று
சொல்லாத வார்த்தை சொல்லி
சொர்க்கத்தைக் காண்பதற்கு..ஆஹா.ஹா.ஹா..
(எனக்கும்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி