Tuesday, May 20, 2008

பாட்டு ஒரு பாட்டு

பாட்டு.. ஒரு பாட்டு..
பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....
(பாட்டு)


ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு -
அதைஎழுதும்போதும் மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும்
ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)


தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு -
பெற்றதந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்கச் சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)


உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு -
நம்இருவருக்கும் தெரிந்ததுதான்
காதலென்னும் பாட்டு
(பாட்டு)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி