மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..
என்னம்மா பண்ணுது உள்ளதைச் சொல்லு
என்னமோ பண்ணுது என்னத்தை சொல்ல ..
மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது
நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது
கட்டுக் குலையாத அரும்பைத் தொட்டு விளையாட
நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
மொட்டுச் சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து
கட்டுக் குலையாத அரும்பைத் தொட்டு விளையாட
நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
மொட்டுச் சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து
பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாச்சி
அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சி
மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது
நெஞ்சைத் தொட்டு தொட்டு ஆசைகளைப்
புட்டு புட்டு சொல்லுது
வெத்திலை பாக்கு வச்சி
விருந்து வீட்டுலே கூட்டி வச்சி
தாலி கட்டியே கை புடிச்சி
கலந்திட வேண்டும்
குத்து விளக்கு வச்சி குலுங்கும் மெத்தையில்
பூ விரிச்சிஇனிக்கும் வித்தை எல்லாம்
படிச்சி சுகம் பெற வேண்டும்
வெத்திலை பாக்கு வச்சி
விருந்து வீட்டுலே கூட்டி வச்சி
தாலி கட்டியே கை புடிச்சி
கலந்திட வேண்டும்
குத்து விளக்கு வச்சி குலுங்கும் மெத்தையில்
பூ விரிச்சிஇனிக்கும் வித்தை எல்லாம்
படிச்சி சுகம் பெற வேண்டும்
காலாட மேலாட கையாட முகம் சிவக்கும்
என் கைகளில் உன் பூ உடல் மிதக்கும்
மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது
நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது
Sunday, May 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி