Saturday, May 17, 2008

லில்லி மலருக்கு ....

லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்
பெண்ணைப் பார்த்ததிலே
(லில்லி)


அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
வந்த இடம் என்னவோ மன்னனிடம் சொல்லவோ
சொந்தம் இது அல்லவோ
எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்
(லில்லி)


தேன் கூடு நீயென்றால்
தேனீக்கள் நானாக வேண்டும்
தீராத பசியோடுதேனாற்றில் நீராட வேண்டும்
நானொன்று நீயன்று நாமொன்று தானென்று
ஒன்றோடு ஒன்றான சொந்தம்
இன்றோடு தீராத இன்பம்
(அந்த)


நாள்தோறும் மார்போடு
நான் உன்னைத் தாலாட்ட வேண்டும்
தாலாட்டு தாளாமல்
நான் உன்னைப் பாராட்ட வேண்டும்
சேல் கொண்ட கண் ஒன்று
பார் என்னைப் பார் என்று
செவ்வானம் போலாடும்போது
சிந்துங்கள் முத்தங்கள் நூறு
(அந்த)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி