Tuesday, May 20, 2008

பச்சைக் கிளி ...........


பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் பேரில் வரும்
தேவன் மகள் நீயோ ?
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் எனும் பேரில் வரும்
தேவன் மகன் நீயோ
(பொன்னின்)


தத்தை போலத் தாவும் பாவை
பாதம் நோகும் என்று
மெத்தை போல பூவைத் தூவும்
வாடைக் காற்றும் உண்டு
வண்ணச்சோலை வானம் பூமி
யாவும் இன்பம் இங்கு
இந்தக் கோலம் நாளும் காண
நானும் நீயும் பங்கு
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ
(பச்சை)


பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன
சொல்லகை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
கண்பட்டாடும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று
பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவா
(பச்சை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி