Tuesday, May 20, 2008

ஒருத்தி மகனாய்.....

ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
(ஒருத்தி)


உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்
உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்
பழகும் விதமும் புரிந்தவனாம்
பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்
ஆ.. ஓ... ஊம்ம்...
(ஒருத்தி)


இளையவள் முகத்தைப் பார்த்தானாம்
இதயத்தை அவளிடம் கொடுத்தானாம்
அழகியை அருகில் அழைத்தானாம்
ஆசையில் அவளை அணைத்தானாம்ஆ........ஓ........ஊம்......
சாத்திரம் சரித்திரம் படித்தவனாம்
தவறு செய்பவரைப் பிடிப்பவனாம்
ராத்திரி பகலாய் அலைவானாம்
ரகசிய போலீஸ் சேவகனாம்
(ஒருத்தி)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி