Friday, May 9, 2008

ஆடை முழுதும் .....

ஆடை முழுதும் நனைய நனைய
மழை அடிக்குதடி -
நெஞ்சில் ஆசை வெள்ளம் வழிய வழிய
அலை அடிக்குதடி

நீல விழிகள் மயங்கி மயங்கி
கதை படிக்குதடி -
புது நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி
அம்மம்மம்மம்மா... அம்மம்மம்மம்மா... (ஆடை)

கன்னம் கண்ணாடி காதலன் பார்க்க
கைகள் பூமாலை தோளினில் சேர்க்க
கண்கள் பொன்ணூஞ்சல் மன்னவன் அட
நெஞ்சம் பூமஞ்சம் தேன் வழிந்தோட
பொங்குது பொங்குது எண்ணக் கனவுகள்
சொல்லுது சொல்லுது அன்புக்கவிதைகள்
ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ..


புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ..

மல்லிகை மலராடும் மங்கல மேடை
மங்கை மணமாலை சூடிடும் வேளை
இல்லறம் உருவாகும் நாள் வரும்போது
இன்பத்தை எடுத்துரைக்க வார்த்தைகளேது சந்தனம் குங்குமம் நெஞ்சு நிறைந்திடும் கண்களும் நெஞ்சமும் ஒன்று கலந்திடும் ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ..

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி