காலம் எனும் நதியினிலே,
காதலெனும் படகு விட்டேன்
மாலை வரை ஓட்டி வந்தேன்..
மறுகரைக்குக் கூட்டி வந்தேன்
ஓடம் என்று நினைத்திருந்தேன்,
ஓடும் என்று நினைக்கவில்லை
நாடும் என்றே நாடி நின்றேன்,
நாடகம் என்று எண்ணவில்லை
இதயம் என்ற கூட்டினிலே,
இருவருக்கும் இடமில்லை
ஒருவனுக்கே ஒருத்தி என்றே
உலகை விட்டே ஓடுகின்றேன்
தேவனவன் திருவடிகள் வருகவே!
சிந்தனைக்கு அமைதி என்றும் தருகவே
கூடும் இளங்காதலர்கள் வாழ்கவே!
காதல் கொண்டவர்கள் தோல்வியின்றி வாழ்கவே..!
வாழ்கவே..!! வாழ்கவே
Friday, May 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல சோகப் பாடல்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி