Friday, May 16, 2008

ஏதோ ஏதோ ஒரு .....

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -
அதுஎப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் -
கண்ணைஇழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
(ஏதோ)


நிலவைப்போலே பளபளங்குது
நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
மலரை போலே குளுகுளுங்குது
மனசுக்குள்ளே ஜிலு ஜிலுங்குது
பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
(ஏதோ)


செவந்த பொண்ணு சிரிச்சு வந்தது
சேத்தைப் பூசிக் குளிக்க வந்தது
குளிக்கும்போது பழக்கம் வந்தது
பழக்கம் வந்ததும் மயக்கம் வந்தது
சிரிச்சு வந்தது குளிக்க வந்தது
பழக்கம் வந்தது மயக்கம் வந்தது
(இந்தா)


கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது
கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது
பெண்மை என்பது என்னை வென்றது
பேச்சு நின்றது வெட்கம் வந்தது
(ஏதோ)


கண்ணும் கண்ணும் கலந்து விட்டது
காதல் கதவு திறந்து விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது
ஒன்று பட்டது வென்று விட்டது
(இந்தா)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி