Thursday, May 15, 2008

சிரித்தாள்............

சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
(சிரித்தாள்)


மார்கழிப் பனி போல் உடையணிந்து -
செம்மாதுளங்கனி போல இதழ் கனிந்து
கார்குழலாலே இடையளந்து - நீ
காத்திருந்தாயோ எனை நினைந்து


அழகெனும் வடிவில் நிலையிழந்தேன் -
இந்தஆண்மகன் பிடியில் எனை மறந்தேன்
பழகியும் ஏனோ தலை குனிந்தேன் -
இன்றுபருவத்தின் முன்னே முகம் சிவந்தேன்
(சிரித்தாள்)


கயல்விழி இரண்டில் வயல் அமைத்து -
அதில்காதல் என்றொரு விதை விதைத்து
காலமறிந்து கதிர் அறுப்போமா
காவிய உலகில் குடியிருப்போமா


பஞ்சணைக் களத்தில் பூவிரித்து -
அதில்பவள நிலாவை அலங்கரித்து
கொஞ்சிடும் இரவை வளர்ப்போமா -
சுகம்கோடிக் கோடியாய்க் குவிப்போமா
(சிரித்தாள்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி