Thursday, May 15, 2008

எதிர்பாராமல் ............

எதிர்பாராமல் நடந்ததடி -
முகம் கண்ணுக்குள் விழுந்ததடி -
புதிய சுகம் ஒன்று புகுந்ததடி -
அது பொழுதுக்கு பொழுது வளருதடி
(எதிர்)


பஞ்சணை மயக்கம் பரவுதடி -
மேலேபறப்பது போலே தோன்றுதடி
அஞ்சன விழிகள் துடிக்குதடி
அறைகுறை தூக்கம் பிறக்குதடி
(எதிர்)


வடிவேல் முருகன் என் வந்தான் -
குறவள்ளி என்றே நான்
எதிர் கொண்டேன்மடி மேல்
காதல் துயில் கொண்டேன் -
அவன்மார்பினிலே நான் குடி கொண்டேன்
யாருக்கு யார் என் எழுதியவன் -
என்னைஅவனுக்குத்தான் என எழுதிவிட்டான்
நேருக்கு நேரே பார்க்க வைத்தான் -
மனம்நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தான்..தவிக்க வைத்தான்..
(எதிர்)


தேவர் தலைவன் திருமுருகன் -
இந்ததெய்வானை திருமண முருகன்
காவல் வேலுடன் ஓடி வந்தான் -
என்னைக்கட்டிக் கொண்டான்
கரம் பற்றிக் கொண்டான்


குன்றத்து முருகன் போல வந்தான் -
தன்குலத்தினில் என்னைச் சேர்த்துக் கொண்டான்
மன்றத்தில் என்னுடன் பள்ளி கொண்டான் -
என்னைமல்லிகைப் பூப்போல
அள்ளிக் கொண்டான்..அள்ளிக் கொண்டான்..
அள்ளிக் கொண்டான்..முருகா.., முருகா..
. முருகா முருகா முருகா முருகா

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி