Monday, May 12, 2008

நீயோ நானோ .....

நீயோ நானோ யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே
நினைவைக் கவர்ந்தது யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே


நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே
நிம்மதி இழந்தது யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே

இரவின் அமைதியில் நீ வருவாய்
இரவின் அமைதியில் நீ வருவாய்
என் மன நிலையும் நீ அறிவாய்
உறவின் சுகமும் பிரிவின் துயரும்
உனைப் போல் என் மனம் அறியாதோ


நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே

பூ விரிச் சோலையில் மயிலாடும்
பூ விரிச் சோலையில் மயிலாடும்
புரிந்தே குயில்கள் இசை பாடும்
காவிரி அருகே நானிருந்தாலும்
கண்ணே என் மனம் உனை நாடும்

நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே

தேய்வதும் மறைவதும் உன் அழகே
தேய்வதும் மறைவதும் உன் அழகே
அவர் சிந்தையில் நிலைப்பாடு என் வடிவே
பார்த்தது போதும் பருவ நிலாவே
பாவை என் துணையை மயக்காதே

நீயோ நானோ யார் நிலவே
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி