அன்பு மலர்களே நம்பி இருங்களேன்.
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே...
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய்கனியாகும் நமக்கென வளர்ந்து
நாளை நமதே..
( நாளை )
வீடு என்னும் கோவிலில் வைத்த
வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளிமயமாக
வெளிச்சம் தாருங்களேன்
நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும்
இதயம் என்றும் மாறாது
( நாளை )
Monday, May 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி