Friday, May 9, 2008

அம்மாடி தூக்கமா .....

அம்மாடி தூக்கமா..
ஆமாமா கேக்கணுமா...
ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா இந்த
ஏக்கத்திலே படுத்திருந்த
தூக்கமும் வருமா உம்... (அம்மாடி)

நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
அது காத்தடிக்கிற வேளையிலே
கனிந்தது யார் பொறுப்பு
பார்த்து நின்னது வயசு -
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
ஆனா பயமிருக்குது காரணம்
இந்த பாடம் எனக்கு புதுசு...
காதல் எனக்கு புதுசு.. (அம்மாடி)

விடிய விடிய வீசு -
உன் விழியை எடுத்து வீசு
உன் கைகளில் நான் குடியிருந்தால்
உலகம் எனக்கு தூசு
நாலு பேரை அழைப்பேன் -
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
இந்த நாட்டுப் பெண்ணை அருகில்
வைத்தது நாடகத்தை நடிப்பேன்...
காதல் நாடகத்தை நடிப்பேன்.. (அம்மாடி)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி