Friday, May 9, 2008

ஆளைப் பார்த்து ..........

ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து
ஆசை வைக்காதே
ஆரவார நடையைப் பார்த்து
மயக்கம் கொள்ளாதே
ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து
ஆசை வைக்காதே


சூட்டைப் பார்த்து கோட்டைப் பார்த்து
தூண்டில் முள்ளில் மீனைப் போல
விழுந்து வைக்காதே சொக்கி நிக்காதே
சூட்டைப் பார்த்து கோட்டைப் பார்த்து
தூண்டில் முள்ளில் மீனைப் போல
விழுந்து வைக்காதே சொக்கி நிக்காதே


ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து
ஆசை வைக்காதே

கண்ணை விழித்துப் பார்ப்பதாலே உண்மை தெரியாது
கன்னத்தின் மேல் கை வைத்தாலும் உள்ளம் புரியாது
நீட்டி நிமிர்ந்து சாய்வதாலே நிலமை விளங்காது
நின்னு நின்னு தவம் செய்தாலும் பொண்ணு மயங்காது

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி