Tuesday, May 20, 2008

பொன்னுலகம் நோக்கி ...

ஓவியம் கலைந்ததென்று ஓவியர்கள் வெறுப்பதில்லை
உருக்குலைந்த கோட்டையினை சரித்திரம் மறப்பதில்லை
மறையாத காதலிலே மனம் கனிந்து வந்தாளோ
மறந்துவிட நினைப்பாளோ மறுபடியும் வருவாளோ


பொன்னுலகம் நோக்கிப் போகின்றோம்
புத்தம்புதிய சுகம் காணுகின்றோம்
மண்ணுலகில் இருந்து விண்ணுலகில் பறந்து
கண்ணுலகில் கலந்து வாழுகின்றோம்
(பொன்)


கன்னியர் வாழ்வில் இது வெறும் இரவு -
ஒன்றுகலந்தவர் காணவந்த தனி இரவு
அன்னையர் தாலாட்டும் நல் இரவு -
நாம்அறியாத கலைகளுக்கு முதல் இரவு
(பொன்)


அன்பு பிறந்தவுடன் மெய் சிலிர்க்கும் -
மனம்அடிக்கடி ஒன்றை எண்ணித் துடித்திருக்கும்
சந்திரன் தேய்ந்தாலும் வளர்ந்திருக்கும் -
இந்தத்தாமரை காலமெல்லாம் மலர்ந்திருக்கும்
(பொன்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி