நீயும் நானும் ஒன்று -
ஒருநிலையில் பார்த்தால் இன்று
( நீயும் )
அழகை உனக்கு கொடுத்த இறைவன்
அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்
விழியை எனக்கு கொடுத்த இறைவன்
வழியைக் காட்ட மறுத்து விட்டான்
( நீயும் )
எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம்
என்பதுனக்கும் தெரியவில்லை
எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம்
என்பதெனக்கும் புரியவில்லை
( நீயும் )
உறவுமில்லை பகையுமில்லை
உயர்வும் தாழ்வும் உனக்கில்லை
இரவுமில்லை பகலும் இல்லை
எதுவும் உலகில் எனக்கில்லை
( நீயும் )
Monday, May 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி