Monday, May 19, 2008

நீ என்னென்ன சொன்னாலும் .....

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...


சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
முத்துச்சரமென குறு நகை புரிந்து
( நீ )

பொன்னில் அழகிய மனதினை வரைந்து
பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து
பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
கங்கை நதியென உறவினில் கலந்து
உறவினில் கலந்து...
( நீ )


வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
இந்த உலகினை ஒரு கணம் மறந்து
ஒரு கணம் மறந்து...
( நீ )

2 comments:

Narayanan Kanagarajan said...

பிறருக்கு எப்பொழுதும் உவகை தரும் செயல்களிலே ஈடுபட இளமையான மனதுடன் என்றென்றும் இருக்க வாழ்த்துகிறேன்.

அன்பன் கனகராஜன்

பூங்குழலி said...

மிக்க நன்றி கனகராஜரே

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி