Monday, May 19, 2008

நாணமோ .....

நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன ?
அந்தப் பார்வை கூறுவதென்ன ?
நாணமோ.. நாணமோ..


நாணுமோ.. இன்னும் நாணுமோ
தன்னை நாடும் காதலன் முன்னே
திரு நாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..


தோட்டத்துப் பூவினில் இல்லாதது -
ஒருஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது.. அது எது ?


ஆடவர் கண்களில் காணாதது -
அதுகாலங்கள் மாறியும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது.. அது இது..
( நாணுமோ )


மாலையில் காற்றினில் உண்டாவது -
அதுமஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது அது எது ?


உண்டால் மயக்கும் கள்ளாவது -
அதுஉண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் மாறுவது
ஞானியின் கண்களும் தேடுவது.. அது இது..

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி