Monday, May 19, 2008

முகத்தை காட்டி ....


முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா
ஆஹா..ஓஹோ..ஊஹ¥ம்..ஊஹ¥ம்..
(முகத்தை)


கண்ணாரப் பார்த்து பார்த்துக்
கவிதை எழுதவாகையோடு சேர்த்து சேர்த்து
கதைகள் பேசவா
துள்ளாமல் துள்ளி நானும்
தாளம் போடவா
இல்லாத வார்த்தை சொல்லி
ராகம் பாடவா
(முகத்தை)


இலையில்லாத கொடியில் கூட
மலர்கள் தோன்றுமா
மலர்களோடு போட்டி போடக்
கனிகள் தோன்றுமா
பெண்ணைப் பார்த்த கண்ணுக்கென்ன
சொல்ல வேண்டுமா
பேசப் பேச ஆசையின்றி
வேறு தோன்றுமா
(முகத்தை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி