செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
(செல்ல)
நெஞ்சில் குடியிருக்க நித்தம் கொலுவிருக்க
கெஞ்சும் குமரிப் பெண்ணின் வாசல் வருவான்
கண்ணால் கொடி வளர்த்து
காதல் மலர் பறித்து
பெண்ணில் குழல் முடிக்க
வள்ளல் தருவான்
(செல்ல)
ஊரார் பலர் இருந்தும் உற்றார் சிலர் இருந்தும்
வேறோர் இடத்தில் என்னைத் தரவில்லையே
உன்னை நினைவில் வைத்து
நினைவை மனதில் வைத்து
மனதை கொடுத்தும் சுகம் பெறவில்லையே
(செல்ல)
Thursday, May 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி