Monday, May 19, 2008

நல்லது கண்ணே ....



நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா..சீதா.. சீதா..சீதா.. சீதா...


நல்லது கண்ணா கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா..ராமா...ராமா..ஸ்ரீ ராமா...


காலோடு கால்கள் பின்ன
ஊர்கோலம் போகும் மேகம்
மாப்பிள்ளை பெண்ணோடு
பன்னீரில் நீராடச் செல்கின்றதோ
( நல்லது கண்ணே)


தேடும் உறவுகள் இரவை நினைந்து
வாடும் நிலை கண்டேன்
பாடும் பறவைகள் பனியில் விழுந்து
கூடும் சுவை கண்டேன்
தேவைகள் ஆயிரம்
பார்வையில் தீருமோ
( நல்லது கண்ணா)


மாலைப் பொழுதினில் மன்னனின் மார்பின்
மஞ்சள் பதியாதோ
காலைப் பொழுதில் கட்டி அணைத்துக்
கண்கள் சிவக்காதோ
நீண்ட நாள் வாழ்வினை
வேண்டினேன் வந்தது
( நல்லது கண்ணே)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி