கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வரச்சொல்லுங்கள்
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் காதலனை இங்கு வரவிடுங்கள்
கொஞ்சம் வரவிடுங்கள்
(கனவுகளே)
நகக்குறி வரைகின்ற சித்திரமோ -
அங்குநாணங்கள் தூரிகை வண்ணங்களோ
முகம் என்று அதற்கொரு தலை நகரோ -
விழிகள்மூடிய கோட்டைக் கதவுகளோ
இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே -
அங்குஇதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே
கைவளை விலங்குகள் நொறுங்கட்டுமே -
அங்குகாதலின் சிறகுகள் உயரட்டுமே -
அங்குகாதலின் சிறகுகள் உயரட்டுமே
(கனவுகளே)
உடை என்ற திரை மட்டும் விலகட்டுமே -
இன்பஉடல் எங்கும் நாடகம் நடக்கட்டுமே
உறவென்ற தேர் இங்கு ஓடட்டுமே -
அதில்ஊடலின் கொடி ஒன்று அசையட்டுமே
நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே -
அதில்நித்திரை இரவுகள் எரியாட்டுமே
காதலில் கவிதைகள் வளரடூமே -
ஒருகாவியம் தொட்டிலில் தவழட்டுமே -
ஒருகாவியம் தொட்டிலில் தவழட்டுமே
(கனவுகளே)
Saturday, May 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல பாடல்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி