Saturday, May 24, 2008

ஒருவர் ஒருவராய் ....

ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
உறவு மழையிலே நனைந்தோம்
உலக சுகத்திலே மிதந்தோம்

பெருகி பெருகி வெள்ளம் ஓடும்
உயிர் பிழிந்து பிழிந்து சுவை தேடும்(2)
உருகி உருகி உள்ளம் கூடும்
உலகத் தோற்றமே மாறும்

இறைவன் போட்டததிந்த தோட்டம்
அதில் இனிமை ஒன்று தான் நாட்டம்
நாளை என்றேதுவும் இல்லை
நடக்கும் வாழ்க்கை தான் எல்லை

1 comment:

Information said...

மிகவும் அருமையான பாடல்.

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி