குங்கும பொட்டின் மங்கலம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
குங்கும பொட்டின் மங்கலம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்
தித்திக்கும் இதழ் மீது மோகம் தந்ததே
மான்தளிர் தேகம் தந்ததே
மான்தளிர் தேகம் தேகம்....தேகம்......தேகம்
மனம் சிந்திக்க சிந்திக்க சொல்லும்
தினம் சந்திக்க சந்திக்க இன்பம்
பெண்ணான பெண் என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி கோடி......கோடி........கோடி
(குங்குமப்........
தங்கம் மங்கும் நிறமான மங்கை
அங்கும் எங்கும் ஆனந்த கங்கை
ஜில்லென குலிர் காற்று வீசும்
மெளனமே தானங்கு பேசும் மெளனமே தானங்கு பேசும் பேசும்........பேசும்.......பேசும்
மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்
விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்
கற்பனை கடலான போது சென்றதே
பூந்தென்றல் தூது சென்றதே பூந்தென்றல்
தூது தூது........தூது.......தூது
குங்குமப் பொட்டின்....
Friday, May 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மிகவும் அருமை.
மனிதரில் புனிதராக வாழ்ந்த மாபெரும் தலைவர் மக்கள் திலகத்தின் புகழ்பாடும் பல்லாயிரக்கணக்கான உள்ளங்களில் அடியேனும் ஒருவன் .
நீங்களும் அந்த வழியில் இருப்பது கண்டு மகிழ்ச்சி
வாழ்க பல்லாண்டு எம்ஜிஆர் புகழ்
உங்கள்
அவர் புகழ் பல்லாண்டு வாழப்போவது திண்ணம் தான்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி