Tuesday, May 13, 2008

எங்கே அவள் ....

எங்கே அவள்
என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா(எங்கே அவள்)

முத்தாடும் மார்பில் முகம் பார்க்க எண்ணும்
என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை
மூடவும் வேண்டுமோ(எங்கே அவள்)

தென் தேரிலாடும் பனி போன்ற முல்லை
தேன்மாங்கனி என்று நான் தேடினேன் உன்னை
கைவளை ஓசையில்
மைவிழி ஆசையை காணவும் வேண்டுமோ (எங்கே அவள்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி