Tuesday, May 13, 2008

வாராய் ......

வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே (2)
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய் (2)அங்கே
வாராய்

அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓஓஓஓ (2)
அழிவிலா மோன நிலையைத் தூவுதே
முடிவிலா மோன நிலையை நீ (2)
மலை முடியில் காணுவாய் வாராய்

இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவோம் அங்கே (2)
புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய்(வாராய்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி