Tuesday, May 13, 2008

சரச ராணி ....

சரச ராணி கல்யாணி
சுக சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதி வதனி
சரச ராணி..........

புனித ராஜ குல திலகா
தவ புனித ராஜ குல திலகா
பூலோகம் போற்றும் அழகா குண ரசிகா
புனித ராஜ குல திலகா.........

கனியில் மேவும் ரச இனிமைப்போலே
இந்த வனிதை வாழ்வில் நீ தர வா
கனியில் மேவும்...

நான் எனது வாழ்வில் பெரும் பெருமை யாவும்
உந்தன் மகிமையால் வருவதல்லவா
நான் எனது.............
எனை புகழ்ந்து பேசுவது தகுமா ராஜா
எனை புகழ்ந்து.........
மனம் மகிழ்ந்து கூறும் மொழி
நிஜமாய் ராணி
மனம்..........

நிலை மறந்தேன் கண்ணா
உளம் தெரிந்தேன் கண்ணே
இல்லறமாம் நல்லறம் நாடும் முறையாலே
இணையான இருவரால் மலரும் நேசம்
அதில் ஏற்படும் சந்தோஷம் விசேஷம்
இருவரால் மலரும் நேசம்........

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி