Monday, May 26, 2008

ஒன்றே குலமென்று ...

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

2 comments:

கலைவேந்தன் said...

மிகவும் அருமையான வலைப்பூ. அண்ணல் எம்ஜிஆரின் அனைத்துப்பாடல்களும் ஒரே இடத்தில் அமைந்து என்னைப்போன்ற எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மிகவும் இனிய விருந்தாக அமைந்துள்ளது.

நன்றி பூங்குழலி. இன்னும் விடுபட்டவை பதியுங்கள்.

கலைவேந்தன்

பூங்குழலி said...

மிக்க நன்றி கலைவேந்தன் உங்கள் வாழ்த்துகளுக்கு ....
மீதமுள்ள பாடல்களை திரட்ட முயன்று கொண்டிருக்கிறேன் .அவரது ஆரம்ப கால பாடல்களையும் சில இறுதி படங்களின் பாடல்களையும் திரட்டுவது சிரமமாக இருக்கிறது

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி