Tuesday, May 20, 2008

ஒரே முறை தான் ....

ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
(ஒரே)


வானம் பார்த்த பூமியின் மேலே
மழை என விழுந்தாயே
நீலம் பூத்த விழிகளினாலே
நீ எனை அழைத்தாயே
வசந்த காலப் பூக்களின் மேலே
வண்டென அமர்ந்தாயேஅமர்ந்த வண்டு
பறந்துவிடாமல்ஆசையில் அணைத்தாயே
(ஒரே)


காளையர் தோளில் ஆடி மகிழ்ந்தால்
காதல் சுவையாகும்
கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
கல்லும் மலராகும்
பொல்லா மனதில் ஆசை புகுந்தால்
பொழுதும் கதையாகும்
புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்
புதுப்புது இசையாகும்
(ஒரே)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி