கலை வந்த விதம் கேளு கண்ணே -
உடல்கட்டோடு அழகாகக் கூத்தாடும் பெண்ணே
(கலை)
காற்றினிலே பிறந்து ஒலியானது -
அதுகாட்டுப் புல்லில் நுழைந்து இசையானது
மாட்டிடையன் கையில் குழலானது -
குழந்தைவாயினிலே நுழைந்து மொழியானது
(கலை)
உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது -
உயிரின்உணர்ச்சியிலே சுருதி லயமானது
தெள்ளு தமிழ் குழந்தை எழிலானது -
அதன்தித்தித்தை... தித்தித்தை...
தித்தித்தை என்ற நடை சதிரானது
(கலை)
Saturday, May 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி