Saturday, May 10, 2008

அன்றொரு நாள் ...

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே -
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன் பாவை மேனீயிலே..
நீ பார்த்தாயே வெண்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தால் என் அருகே -
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம் காதல் மேடையிலே .
. நீ சாட்சியடி வெண்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி