Tuesday, August 19, 2008

காதல் பலி ஆகி நீயும்.....

காதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்
காண்பவர் யாருமே கண்களின் கீதமே
உணர்ந்திட நீயுமே ஓவியமே ஆகினாய்


தீயோன் மேல் காதல் கொண்டே இல்லற வாழ்விலே
தீராத துயரம் கண்டாய் வீண் பழி மேவினாய்
தேசம்தன்னையே பாதுகாக்கவே
தேசம் தன்னையே பாதுகாக்கவே
நாதனை கொன்றுமே நீதிதனை நாட்டினாய்


நாட்டுக்கே பாடம் தந்து போதிக்கும் தியாக சின்னம்
நாளும் உன் கல்லறை மீதில் நாங்களும்
கண்ணீர் சிந்தி மலர்கள் தூவியே மானசீகமாய்
மலர்கள் தூவியே மானசீகமாய்
அன்பு செய்வதன்றியே கைம்மாறு வேறில்லையே

காதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்

1 comment:

Information said...

மிகவும் பழைய அருமையான பாடல்.

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி