காதலிக்காதே கவலை படாதே
ஆசை வைக்காதே அவதி படாதே
காதலிக்காதே கவலை படாதே
ஆசை வைக்காதே அவதி படாதே
மங்கையரெல்லாம் மல்லிகை தோட்டம்
மங்கையரெல்லாம் மல்லிகை தோட்டம்
மற்றவர் எல்லாம் வண்டுகள் கூட்டம்
காதலிக்காதே கவலை படாதே
ஆசை வைக்காதே அவதி படாதே
அந்த நாளில் அல்லி ராணி காதலித்தாளா
இல்லை…இல்லை…இல்லை
ஆணழகை கண்டு மனம் பேதலித்தாளா
இல்லை…இல்லை…இல்லை
அந்த நாளில் அல்லி ராணி காதலித்தாளா
இல்லை…இல்லை…இல்லை
ஆணழகை கண்டு மனம் பேதலித்தாளா
இல்லை…இல்லை…இல்லை
திங்களையோ தென்றலையோ தூது விட்டாளா
அவள் பெண்ணை தவிர யாரையுமே பேசவிட்டாளா
காதலிக்காதே கவலை படாதே
ஆசை வைக்காதே அவதி படாதே
மான் விழியாள் சகுந்தலையாள் மன்னனை கண்டாள்
பாவம்…பாவம் ..பாவம்…
தேன் மொழியாள் அவன் கொடுத்த மோதிரம் கொண்டாள்
பாவம்…பாவம் ..பாவம்…
எத்தனையோ எண்ணங்களை எடுத்து வந்தாளே
மன்னன் இதய வாசல் கதவை மூடி தடுத்துவிட்டானே
காதலித்தாளே கவலை பட்டாளே
ஆசை வைத்தாளே அவதி பட்டாளே
ஆடவரின் நாடகத்தில் ஆயிரம் காட்சி
காட்சி…காட்சி..காட்சி
ஆடுகின்ற ஆட்டத்திற்கு ஆண்டவன் சாட்சி
கெஞ்சிடுவார் கொஞ்சிடுவார் இரக்கப்படாதே
இதயத்திலே எவருக்குமே இடம் கொடுக்காதே
காதலிக்காதே கவலை படாதே
ஆசை வைக்காதே அவதி படாதே
Monday, August 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி