Monday, August 4, 2008

ஆடி வா ...

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை

ஆடி வா
ஆடி வா
ஆடி வா

ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா

இடை என்னும் கொடியாட நடமாடி வா
இசை கொண்டு அழகே நீ தேராடி வா
தரை மீது போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
(ஆடி வா )

மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
(ஆடி வா )

உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ
(ஆடி வா )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி