இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
முழுமதி முகத்தை கைகளில் மறைத்தால்
வையகம் முழுதும் இருளாகும்… இருளாகும்
சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்
சம்மதம் என்றே பொருளாகும்
சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால்
சம்மதம் என்றே பொருளாகும்
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி
வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா
பகலினில் தூங்கி இரவினில் விழித்து
மாலையில் மயங்கும் கண் அல்லவா
பகலினில் தூங்கி இரவினில் விழித்து
மாலையில் மயங்கும் கண் அல்லவா
கண் அல்லவா ஆஆ ஆஆ
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
சரம் சரமாக மழைத்துளி விழுந்தால்
சிப்பியின் வயிற்றில் முத்தாகும்… முத்தாகும்
கதை கதையாக எழுதுவதெல்லாம்
பொழுது விடிந்தால் முடிவாகும்
கதை கதையாக எழுதுவதெல்லாம்
பொழுது விடிந்தால் முடிவாகும்
இப்படியே இருந்துவிட்டால்
எப்படி இருக்கும் எதிர்காலம்
கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால்
அது கோடை என்றாலும் குளிர்காலம்
Monday, August 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி