Thursday, August 28, 2008

பாய் விரித்தது ...

பாய் விரித்தது பருவம்
பள்ளி கொண்டது இளமை
குரல் கொடுத்தது சேவல்
விழித்துக் கொண்டன கண்கள்
(பாய்)


நிலவுமகள் நடை பயில்வதென்ன -
எந்தன்நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன
இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன -
ஒருஇடைவேளை இன்றி நடிப்பதென்ன
வளைக்கரம் இருந்தால் துணைக்கரம் வேண்டும்
துணைக்கரம் இருந்தால் தொடச்சொல்லத் தோன்றும்
(பாய்)


வழிவழியாய் வந்த வழக்கப்படி -
இந்த விழிவழியாய் கொஞ்சம் வா இப்படி
படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி -
கதைபடிக்க வந்தாள் இந்த பருவக்கொடி
முதல் முதல் படித்தால் மயக்கத்தைக் கொடுக்கும்
படித்ததை முடித்தால் பல நாள் இனிக்கும்
(பாய்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி