Tuesday, August 26, 2008

ஏன் உள்ளம் உந்தன் ஆராதனை ....

என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
அன்பு கொண்டாடும் நன்னாள் இது
ரெண்டு கையோடு கை சேர்ந்தது
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

சுகம் என்பதொரு ஆறு
காதல் என்பதொரு தோணி
பொன்மாலை நேரத்தில் போவோம் அங்கே
வெட்‌கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வெட்கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வண்ணமேக தேரேறி போவோம் அங்கே
வண்ணமேக தேரேறி போவோம் அங்கே


தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
மங்காத சங்கீதம் என் மேனியில்
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே
காணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே

தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி