Monday, August 25, 2008

உள்ளம் ரெண்டும் ஒன்று ...

உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு (உள்ளம்)
உயிரோவியமே... கண்ணே
நீயும் நானும் ஒன்று (2)
உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு

காதல் ஜோதி வானிலே
கலையாய் திகழ்வோமே...
ஆஆஅ...ஆஆஆஆ...ஆஆஆ...
காதல் ஜோதி வானிலே
கலையாய் திகழ்வோமே...
கண்ணா அனுராகத்திலே
கனிந்தே மகிழ்வோமே...(2)
அன்பே அனுராகம்...
அது தானே வாழ்வின் யோகம்
ஆஆஆ...ஆஆஆஅ..ஆஆஆஆஅ...
அன்பே அனுராகம்...
அது தானே வாழ்வின் யோகம்

அசைந்தாடும் பூங்கொடியே
ஆசை தென்றல் நானே
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசை தென்றல் நான்
வானில் மேவும் நிலவோ
கிள்ளை காத்து ஏங்கும் இலவோ (வானில்)
வானில் மேவும் வளர்மதியே
வாழ்வில் இன்பம் நீயே (2)

உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு (உள்ளம்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி